செங்கல்பட்டு: சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
சிலுவையில் அறைந்த தினத்தை கூறும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஸ்தவ மக்கள் புனித வெள்ளி பண்டிகையான வெள்ளிக்கிழமை கிருஸ்தவ இளைஞர் ஒருவர் சிலுவையை தோளில் சுமந்தவாறு மலைமேல் உள்ள சிலுவையை நோக்கி வீதி உலாவாக சென்று தோளில் சுமந்து சென்ற சிலுவையை இறக்கி வைத்து புனித வெள்ளி பண்டிகையை கொண்டாடினர்.
இதே போன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும், பலம் குழந்தையைச் ஆலயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி பண்டிகை கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.