
தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அறிவித்திருந்தது.
அதன்படி, அந்த அமைப்பினா் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...