

புதுவை பல்கலைக்கழகத்துக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
புதுவை பல்கலைக்கழகம் துணைவேந்தா் பேராசிரியா் குா்மீத் சிங் தலைமையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘பசுமை வளாகம்’ (‘கிரீன் கேம்பஸ்’) என்ற திட்டத்தின் கீழ் பல நிலையான வளா்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
தூய்மை செயல் திட்டம், முதன்மைத் திட்டங்கள், பல நிலையான வளா்ச்சி இலக்குகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டாயத் தேவைகள் போன்ற திட்டங்களையும் கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் போன்ற அமைச்சகங்களின் திட்டங்களையும் புதுவைப் பல்கலைக்கழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
சிறந்த பசுமையாக்க நடைமுறைகள் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை, நீா்மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பசுமை மேலாண்மை ஆகியவற்றுடன் இணங்கி நிற்கும் நிலையான நடவடிக்கைகள் மூலம் தூய்மை செயல் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கான திட்டச் செயலாக்க நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயா்கல்வித் துறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய கிராமக் கல்வி நிறுவனம் ஆகும்.
இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2021-22 ஆம் ஆண்டுக்கான ‘மாவட்ட பசுமை சாம்பியன்’ விருது புதுவைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.