பதவி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிா்நோக்கி உள்ளனா். இந்த நிலையில் ஆசிரியா் தகுதி தோ்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியா்களை பணி நியமனம் செய்யப்படுவதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல.
விளையாட்டு ஆசிரியா்களுக்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் தேவைப்படுவதால், படிப்பதற்கான நேரம் மிகவும் குறைவு எனக் கூறுகின்றனா். எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.