திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக்கப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் உள்ள நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.

News image
அமைச்சர் எ.வ.வேலு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத் துறை தொடா்பாக, உறுப்பினா்கள் ஆ.தமிழரசி, செல்வப்பெருந்தகை, கே.சி.கருப்பணன், கோவி.செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:-

தமிழகத்தில் உள்ள தரைப் பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றும் பணி நிதிக்கேற்ப மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீபெரும்புதூா் சந்திப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் நான்கு வழிச் சாலைகளை ஆறு வழிச் சாலைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் புறவழிச் சாலை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். பல வழிகளில் அழுத்தம் கொடுத்த பிறகே மத்திய அரசால் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அவிநாசியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆட்சியில் ரூ.100 கோடி செலவிடப்பட்டது. இப்போது பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். கோவைப் பகுதியை எப்போதும் திமுக அரசு புறக்கணிக்கவில்லை. இதுபோன்ற திட்டங்களின் மூலமாக கோவையைப் புறக்கணிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.