1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் நாளை தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com