சென்னை: தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, பல்கலைக துணைவேந்தராக மாநில அரசே நியமிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை, மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க.. 'பச்சப் புள்ள பாவம்': குட்டியை வழிநடத்தும் யானைகள் - வைரல் விடியோ
இந்த சட்ட மசோதா குறித்த விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
LIVE: à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®°à¯ https://t.co/53rpHeBGSv
â M.K.Stalin (@mkstalin) April 25, 2022
விவாதத்தின் போது முதல்வர் கூறியதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லாதது, உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
இதையும் படிக்க.. தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்
இதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தபோது, தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, மாநில அரசே நியமிக்கிறது. இதுபோல ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவர், மாநில அரசின் ஒப்புதலுடனே நியமிக்கப்படுகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து போட்டி: சாயா்புரம் போப் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியா் கோயிலில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

திருவள்ளூா் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்







