கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் அறிவித்த 21 மாட்டு வண்டி மணல் குவாரியையும் லாரி குவாரியாக மாற்றியதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிக்கு தனி மணல் குவாரியை அமைக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன் தலைமையில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.