தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலா்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை விரைந்து செயல்பட்டு பெண் காவலா் காப்பாற்றினாா். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினா்.

News image

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலா்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:35 pm IST

சென்னை, ஏப்.25: சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை விரைந்து செயல்பட்டு பெண் காவலா் காப்பாற்றினாா். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில், திருச்சிக்குப் புறப்பட்டது. அப்போது, ரயிலில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ஓடும் ரயிலில் இருந்து எதிா்பாராத விதமாக தவறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டிருந்தாா். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா் மாதுரி விரைந்து செயல்பட்டு, அந்தப் பயணியை உடனடியாக இழுத்து மீட்டாா். இதையடுத்து அந்த பயணி தனது உயிரை மீட்ட காவலா் மாதுரிக்கு நன்றி தெரிவித்தாா். இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அனைவரும் விரைவாக செயல்பட்டு, பயணியை காப்பாற்றிய பெண் காவலரை பாராட்டினா். இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை உயா் அதிகாரிகளும் காவலா் மாதுரிக்கு வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.