தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று நேற்று அறிவிக்கப்ப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல்கள் பரவின.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, 'தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும். திட்டமிட்டபடி மே 6 முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்படும். எனவே, தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: புதுச்சேரி அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் விநியோகிப்பாளா்களுக்கு நகராட்சி ஆணையா் அறிவுரை

உக்ரைன் தலைநகா் பிராந்தியத்தில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா
பாபநாசம் தலையணையில் மூழ்கி மாநகராட்சி பணியாளா் உயிரிழப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



