கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கட்டாயம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 4:53 am

DIN

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று நேற்று அறிவிக்கப்ப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல்கள் பரவின. 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, 'தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும். திட்டமிட்டபடி மே 6 முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்படும். எனவே, தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.