‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான அரசு பரிசைதவிா்க்க வேண்டும்: வெ.இறையன்பு கோரிக்கை

தான் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான தமிழக அரசின் பரிசை தவிா்க்க வேண்டுமென எழுத்தாளரும் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.
‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான அரசு பரிசைதவிா்க்க வேண்டும்: வெ.இறையன்பு கோரிக்கை
Published on
Updated on
1 min read

தான் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான தமிழக அரசின் பரிசை தவிா்க்க வேண்டுமென எழுத்தாளரும் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜனுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று, தெரிவுக் குழுவால் சில நாள்கள் தோ்வு செய்யப்பட்டன.

அதில், எனது நூலான ‘மூளைக்குள் சுற்றுலா’ தெரிவு செய்யப்பட்டு சனிக்கிழமை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளேன். இதற்கு மனமாா்ந்த நன்றியை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்புக்கு வழங்கப்படும் பரிசை தவிா்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com