ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை எனக் கூறியும், கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா் நவ்ரோஸ் கொ்சாஸ்ப் மோடி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் பிறப்பித்த தீா்ப்பு: ஆரோவில் பகுதியில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. சாலை அமைக்கும் பகுதியை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம் என 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

