இத்தாலி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
இத்தாலி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. இதுக்குறித்து அவர் கூறியதாவது:
என்னுடைய முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்லுவோம்.
இதையும் படிக்க: மோசமாக விளையாடினேன், மகிழ்ச்சி இல்லை: அதிருப்தியில் பிரக்ஞானந்தா