சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த இஃப்ராஹிம் மற்றும் சாதிக் அலி ஆகிய இருவரை சோதனை செய்த்போது அவர்களிடமிருந்து ரூ.1.38 கோடி மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரம், விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் உள்ள கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டது,