வேதாரண்யம்: துறைமுகம் கட்டும் பணிக்கு வந்த குழாய்களால் பரபரப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.
ஆதனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களுடன் வந்த லாரிகள்.
ஆதனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களுடன் வந்த லாரிகள்.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.

வேதாரண்யம், ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் துறைமுகம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 25 லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் லாரிகள் வந்துள்ளதால் பகல் நேரத்தில் குழாய்களை இறக்குவதற்கு ஏதுவாக நகரப் பகுதிக்கு முன்பாக ஆதனூர் கிராமத்தின் பிரதான சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே  இந்த குழாய்கள் ஹட்ரோ கார்பன் அல்லது ஓஎன்ஜிசி  திட்டப் பணிகளுக்கு வந்துள்ளதாக சந்தேகம் உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது. 

இதையடுத்து, இதுகுறித்து விசாரித்த தனிப் பிரிவு போலீசார், இவை துறைமுகம் பணிக்கு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com