புது தில்லி: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புத் தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு 2 தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.20,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சர்வாதிகாரியாக மாறுவேன் என எச்சரிக்கும் ஸ்டாலின்: ஏன்? எதற்கு?
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், மாநிலங்கள் அதனை எந்தெந்த தேவைகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கலந்தாலோசித்து நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.