தமிழகத்துக்கான வரி பங்கில் ரூ.4758 கோடி விடுவிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புத் தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது.
தமிழகத்துக்கான வரி பங்கில் ரூ.4758 கோடி  விடுவிப்பு
தமிழகத்துக்கான வரி பங்கில் ரூ.4758 கோடி விடுவிப்பு


புது தில்லி: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புத் தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு 2 தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி,  தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.20,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், மாநிலங்கள் அதனை எந்தெந்த தேவைகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கலந்தாலோசித்து நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com