பிகாா் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவு:-
பிகாா் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தேஜஸ்விக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். பிகாரில் மகாகூட்டணியின் இந்த வருகை நாட்டின் மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி எனக் கூறியுள்ளாா்.