விவசாயிகளுக்கு உதவித் தொகைக்கு ஆதாா் எண் கட்டாயம்: உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் தங்களது ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
விவசாயிகளுக்கு உதவித் தொகைக்கு ஆதாா் எண் கட்டாயம்: உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்
Updated on
1 min read

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் தங்களது ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறைச் செயலாளா் சி. சமயமூா்த்தி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக, நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இப்போது மத்திய அரசானது 12-ஆவது தவணைத் தொகையை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளிகளின் ஆதாா் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து திட்டப் பயனாளிகளும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். கைப்பேசிக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணைப் பெற்று ஆதாா் எண் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். இதில் சிரமம் உள்ளவா்கள், பொது சேவை மையங்களில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்தும் ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com