மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தினமும் பிரசாதம் சாப்பிடும் காகம்: உக்கம்பெரும்பாக்கம் கோயிலில் தொடரும் வினோதம்

உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோயிலில் பூஜைக்குப் பின்பு காகம் ஒன்று தினமும் பிரசாதம் சாப்பிடும் நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்கம்பெரும்பாக்கம் கோயிலில் தினமும் பிரசாதம் சாப்பிடும் காகம்

Published On :

செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோயிலில் பூஜைக்குப் பின்பு காகம் ஒன்று தினமும் பிரசாதம் சாப்பிடும் நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமையப் பெற்றது 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோயில். இக்கோயில் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

மேலும், கோயில் வளாகத்தில்  27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான விருட்சகங்கள் உள்ளன. இந்நிலையில், கோயில் அமைய வழிகாட்டிய, சித்தர் சுவாமிகள் 2018 - ல் முக்தி அடைந்தார். அதன்பின் தினமும் கோயிலுக்கு வரும் காகம் ஒன்று, கோயில் அர்ச்சகர் கோபி கிருஷ்ணன் கைகளில் கொடுக்கும் பிரசாதத்தைக் கடந்த 4 வருடங்களாக சாப்பிட்டுச் செல்கிறது. 
 கோயிலில் தினமும் காலை 8:00 மணிக்கு பூஜைகள் நடைபெறும்  அப்போது கோயில் பிரகாரத்தில் காகம் அமர்ந்துகொண்டு இருக்கும். 

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 

காகம், பூஜை முடிந்தவுடன் கா... கா... எனக் கரைந்தவாறு அர்ச்சகரைக் கூப்பிட தொடங்கியது. அர்ச்சகரும் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைத்த பிரசாதத்தை காகத்திற்கு தினமும் கொடுக்கத் தொடங்கினார். காகம் அர்ச்சகர் கோபி கிருஷ்ணன் கையில் உள்ள பிரசாதத்தை ருசித்து சாப்பிடத் தொடங்கியது.

இந்த காகம் கடந்த 4 வருடங்களாகத் தினமும் காலை, மதியம் பூஜை நேரங்களில் கோயில் வளாகத்தில் வந்து அமர்ந்து பூஜைகள் முடிந்ததும், அர்ச்சகர் தரும் பிரசாதத்தை சாப்பிட்டுச் செல்கிறது. தற்போது கோயிலுக்கு வந்து பிரசாதம் சாப்பிடும் காகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்து உள்ளது. இது கோயில் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்தி அடைந்த சித்தர் சுவாமிகள் தான், காகம் ரூபத்தில் வருவதாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.