மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் நடைபெற்று வரும் ஆடிப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் 10 ஆவது நாளாக தீர்த்தவாரி உற்சவத்துக்காக, கடந்த வெள்ளிக்கிழமை பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படிக்கு அழகர் புறப்பாடானார். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக கோயிலுக்கு வந்து மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் வீர அழகரை அழைத்துச் சென்றனர். கடைவீதிகளில் வியாபாரிகள் அழகருக்கு பூஜைகள் நடத்தினர்.

அலங்காரக் குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
குதிரை வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற அழகர் மண்டகப்படிக்குப் போய்ச் சேர்ந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் மாலையில் அருகேயுள்ள அலங்காரக்குளத்தில் அழகருடன் உடன் வந்த சக்கரத்தாழ்வருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மண்டகப்படியில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் இங்கு தங்கி அருள்பாலித்த அழகர் சனிக்கிழமை காலை மண்டகப்படியிலிருந்து குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்பாடானார். அண்ணாமலை நகர் உள்ளிட்ட வீதிகளில் ஆரோகனித்து வந்த அழகரை மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வாசல் தெளித்து கோலமிட்டு வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அழகர் கோயிலுக்குச் சென்றடைந்தார். அழகரின் தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு பட்டத்தரசி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



