வரும் 17ஆம் தேதி தில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளார்.
அத்துடன், தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க- பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரையும் முதல்வர் சந்திக்கிறார்.