கரூர் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள லிஃப்ட் திடீரென பழுதானதால் சிக்கிக்கொண்ட பத்து பேரும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக அலுவலகத்தில் உள்ள லிஃப்ட்டில் மக்கள் சென்றுள்ளனர். அப்போது, திடீரென லிஃப்ட் பழுதானதால் மக்கள் 10 பேர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
இதையும் படிக்க | குரூப் 'சி'பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லிஃப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்து மக்கள் 10 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.