சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:37 pm IST

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அப்போது பேட்மிட்டன் விளையாடிய அவர், மக்களுடன் சுயபடமும் எடுத்துக்கொண்டார். காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கரோனா வந்தபோது பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம் என்றார். 

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது சாலையில் 3 மணி நேரத்திற்கு முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.