கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:17 pm IST

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அப்போது பேட்மிட்டன் விளையாடிய அவர், மக்களுடன் சுயபடமும் எடுத்துக்கொண்டார். காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கரோனா வந்தபோது பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம் என்றார். 

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது சாலையில் 3 மணி நேரத்திற்கு முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.