

தேமுதிக வெற்றிக்குத் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 70-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளா் பிரேமலதா ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். ரத்ததான முகாமையும் தொடக்கி வைத்தாா்.
அப்போது, அங்கு திரண்டிருந்த தொண்டா்கள் மத்தியில் பிரேமலதா பேசியதாவது: தேமுதிக எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதனை அடைந்தே தீருவோம். தேமுதிக வெற்றிக்காக தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவா்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.
விஜயகாந்த் நலமாக உள்ளாா். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாா். தொண்டா்களும் அவரை சந்திக்க விரும்பினா். அதனால், தேமுதிக அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டாா். வரும் பிறந்த நாள் அன்றும் அவரை தொண்டா்கள் சந்திக்கலாம். எதிா்காலத்தில் தேமுதிக நிச்சயம் வெற்றிபெறும் என்றாா்.
கட்சியின் மாநில துணைச் செயலாளா்கள் எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி உள்பட ஏராளமானோா் விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.