திருப்பூரில் ரூ.167.58 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்! 

திருப்பூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.167.58 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  
திருப்பூரில் ரூ.167.58 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்! 

திருப்பூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.167.58 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஏற்பாடு தெய்த ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பித்தார். 

திட்டங்கள் குறித்து தகவல்கள் பின்வருமாறு: 
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் தேங்காய் மட்டையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சுமார் 4500 நிறுவனங்கள், ஆண்டிற்கு சுமார் ரூ.8000 கோடி விற்றுமுதல் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. எனினும், இத்தொழில் மேலும் 10 மடங்கு அதிகரிக்க தேவையான வளங்களும், வாய்ப்புகளும் இங்கு உள்ளன. இதனைன கண்டறிந்த தமிழ்நாடு அரசு, 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், கயிறு வணிக வளர்ச்சிக்கானன ரூபாய் 5 கோடி ஒதுக்கீட்டில் ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ அமைக்கப்படும் என அறிவித்தது.

அறிவிக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்கு உள்ளாகவே, புதிய கயிறு குழுமங்கள் அமைத்தல், புதிய சந்தைகள் அடையாளம் காணுதல், நுகர்வோருடன் பிணைப்பை ஏற்படுத்தி, கயிறு வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் உலக அரங்கிற்கு கொண்டு செல்லுதல், நவீன வதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை உருவாக்குதல், இத்தொழில் துறையில் புதுமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்த, தொழில் கல்வி கூட்டாண்மைய உருவாக்குதல், ஆகிய இலக்குகளை முன்வைத்து செயல்படும் வகையில், “தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தினை” முதல்வர் ஸ்டாலின்  கோயம்ம்புத்தூரில் வியாழக்கிழமை  (ஆக.25) தொடங்கி வைத்தார். 

திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதால், இன்றைய தினம் ரூ.36.60 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.26.58 கோடி அரசு உதவியுடன் நான்கு புதிய கயிறு குழுமங்கள் அமைப்பதற்கான ஆணையினை முதல்வர் வழங்கினார். 

இதன் விவரங்கள் பின்வருமாறு,
❖ திருப்பூர் மாவட்டத்தில் - குண்டடம் (ரூ.13.95 கோடி திட்ட மதிப்பீட்டில் 8.75 கோடிஅரசு உதவியுடன்) மற்றும்
❖ உடுமலைப்பேட்டை (ரூ.6.92 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.6.23 கோடி அரசு உதவியுடன்),
❖ கரூர் மாவட்டத்தில் – கே. பரமதி (ரூ.6.93 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.5 கோடி அரசு உதவியுடன்),
❖ கோவை மாவட்டத்தில் – பொள்ளாச்சி (ரூ.8.80 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ரூ.6.60 கோடி அரசு உதவியுடன்),

இப்புதிய கயிறு குழுமங்கள் அமைய உள்ளன. மேலும், ரூ. 8.78 கோடி திட்ட மதிப்பீட்டில், MSME துறையின் திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் மற்றும் முதலீட்டு மானியம் ஆகியவற்றின் கீழ் கயிறு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள 6 தொழில் முனைவோர்களுக்கு மானிய உதவிகளை முதல்வர் வழங்கினார். 

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் 
MSME நிறுவனங்களின் நீண்ட நாள் பிரச்னைனயான நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்கிற புதிய திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். 

❖ இத்திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், ரூ.40 லட்சத்திற்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும் மத்திய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் இறைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது.

❖ இத்திட்டத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் பொதுவாக வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலமாக செயல்படுத்தப்படுவதால், கடன் விண்ணப்பப் பரிசீலனை நேரம் வெகுவாக குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

❖ தாய்கோ வங்கியிலிருந்து கடன் பெறவிருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

❖ மேலும், இத்திட்டத்தின் கீழ் எம்எஸ்எம்உ நிறுவனங்களுக்கான கடன் “தரமதிப்பீடு” நிறுவனங்களின் ‘கடந்த கால கடன் திருப்பி செலுத்திய காரணி’ மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளைக் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தரமதிப்பீடு எம்எஸ்எம்இ நிறுவனங்கள், வங்கிகள்/ நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற பேருதவியாக இருக்கும்.

மேற்கூறிய அனைத்து நடைமுறைகளையும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது என்றும் இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் முதல்வர் தெரிவித்து, இத்திட்டத்தினை தொடக்கி, தமிழ்நாடு கடன் உத்தரவாதத்துடன் ரூ.1.19 கோடிக்கான கடன் தொகையினை, திருப்பூர் மண்டலத்தை சேர்ந்த முதல் 5 பயனாளிகளுக்கு வழங்கினார். இதுமட்டுமல்லாமல், 70-க்கும் மேற்பட்ட மற்ற பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.17 கோடியளவில் கடனைப் பெற்று இன்றைய தினமே இத்திட்டத்திலிருந்து பயன்பெறுவார்கள்.

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி செயல்முறை தளம்
❖ MSME நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை மிகவும் காலதாமதமாக பெறும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கோடு முதற்கட்டமாக சட்டப்பூர்வ வாரியங்கள், மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தலைமை கூட்டுறவு நிறுவனங்களை, ட்ரட்ஸ் எனப்படும் வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளங்களின் கீழ் கொண்டு வர தேவையான மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். 
 
❖ இத்தளத்தில் பங்கு கொண்டு எம்எஸ்எம்இ நிறுவனங்களின் விற்பனை பட்டியல்கள் மீதான கடன் அளிக்கும் வங்கிகளுக்கு 179 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்படவில்லைஎனில் 180-வது நாள் தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கி தனாகவே முன்வந்து செலுத்தும் முறையில் தொகையை வங்கிக்கு அளித்து விடும் என்பது இறையதளத்தின் சிறப்பாகும். 

❖ தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவாதத்தின் மூலம் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் MSME நிறுவனங்கள் தாங்கள் பொருட்கள் வழங்கியதற்கான பட்டியலை இத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த வட்டியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குத் தேவையான கடன் அளிக்கும் வாய்ப்பு  அதிகரிக்கும்.

❖ இதனால், MSME நிறுவனங்களுக்கு தேவையான ‘நடைமுறை மூலதனக்கடன்’ தேவை குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று  முதல்வர் தெரிவித்து, தமிழ்நாடு வர்த்தை வரவுகள் மற்றும் தள்ளுபடி செயல்முறை தளளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முன்னிலை வகித்து, இத்திட்டத்தின் கீழ் பதிவு தெய்த முதல் மூன்று தொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கான தள்ளுபடி கடன் தொகையினை வழங்கினார்.

குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளைச் செய்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்தளை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தல், வரி மற்றும் தணிக்கை போன்றவற்றிற்கான வதிகள் ஆகிய தேவைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட 2019-லிருந்து M-TIPB நிறுவனம் செயல்பட்டு வந்தது. 

தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலில் முழுக்கவனத்தையும் தெலுத்த ஏதுவாக, இத்தேவைகளை நிறைவேற்றி தோளோடு தோள் கொடுக்க தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுதான் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு”. இதனைச் செயல்படுத்த  M-TIPB நிறுவனம் இன்று முதல் ““FaMe TN” (Facilitating MSMEs of Tamil Nadu) என்ற முத்திரையுடன் செயல்படும்.

அனைவருக்கும் அனைத்தும் என்ற வகையில் சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியினை குறிக்கும் விதமாக அமைந்துள்ள “FaMe TN” முன்னெடுப்பின் இலச்சினையினை  முதல்வர் இன்று வெளியிட்டபின், “தொழில் தொடங்குவது எப்படி” என்ற FaMe TN-ன் முதல் புத்தகத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் இறைய வர்த்தக தளங்களின் வாயிலாக புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு, வழிகாட்டிடும் வகையில்  FaMe-TN நிறுவனமும் Open Network for Digital Commerce (ONDC) நிறுவனமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

மேலும், MSME நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார திட்டத்திற்குட்பட்டு இருக்கும் வகையில் வழிகாட்டுதல் பெற Institute of Chartered Accountants of India (ICAI) நிறுவனத்துடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியாக அறமந்திட World Resource Institute (WRI) நிறுவனத்துடனும் FaMe-TN நிறுவனம் புரிந்துணைர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து திட்டங்களும் MSME துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையரகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும்.

உட்கட்டமைப்பு வசதிகள்
❖ கோயம்புத்தூர் மாவட்டம் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.13 கோடி திட்டமதிப்பில் ரூ. 9.06 கோடி அரசு மானியத்துடன் “புதிய தனியார் தொழிற்பேட்டையினை” கொசிமா மூலம் அறமக்கவும்,

❖ சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் ரூ. 24.55 கோடி திட்ட மதிப்பில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் 100 தொழிற்கூட அலகுகள் கொண்ட அடுக்குமாடி உற்பத்தி வளாகம், காட்சி மையம் மற்றும் பொது வசி மையம் அமைக்கவும்,

❖ கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

❖ திருப்பூர் மாவட்டம், நாரணபுரத்தில் ரூ. 15.34 கோடி திட்ட மதிப்பில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக பொது வசதி மையமும்  முதல்வர் தொடங்கி வைத்தார். 

இந்த உட்கட்டமைப்பு திட்டங்கள் தமிழக அரசின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்படும். இதன் மூலமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி வழிகாட்டி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில்  நடைபெற்ற இவ்விழாவில் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி மூலம் பங்கு பெற்றார்கள்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண் ராய், இ.ஆ.ப., வரவேற்புரையாற்றினார்கள். தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., நன்றியுரையாற்றினார்கள். 

இவ்விழாவில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள், வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் ம் TANSTIA  உள்ளிட்ட அனைத்து தொழில்முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com