தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 5,407-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 539-ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 90 பேருக்கும், கோவையில் 69 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தகவல்படி 628 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,22,660-ஆக உயா்ந்துள்ளது.