நடிகராக இருந்தால் சிவாஜி, ரஜினியை மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்  இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
ஜெயக்குமார் (கோப்புப் படம்)
ஜெயக்குமார் (கோப்புப் படம்)

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்  இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்துள்ளனர். அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

பணம் பாதாளம் வரை பாய்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது.

ஆஸ்கரையே ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார் என விமர்சித்தார்.

மேலும், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com