தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி செலவில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தல் எனத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சென்று மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து வருகிறார்.
இதையும் படிக்க | மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு: ராமேசுவர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
இந்லையில், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி செலவில் 18 கோயில்களில் புதியதாக திருமண மணடபங்கள், தங்கும் விடுதி, விருந்து மண்டப்ம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட 25 கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இந்த கட்டடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அணையர் குமரகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.