அனைவருக்கும் வேலை மட்டுமல்ல; தகுதியான வேலை என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனைவருக்கும் வேலை மட்டுமல்ல; தகுதியான வேலை என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
அனைவருக்கும் வேலை மட்டுமல்ல; தகுதியான வேலை என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

திறன் மேம்பாட்டு திட்டவிழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆங்கில பேச்சாற்றால் இல்லாததால், பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெறும் எண்ணத்தை மாணவர்கள் கைவிடுகிறார்கள். எனவே, கல்லூரி முதல் பருவத்தியே ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். வளர்ந்து வரும் தொழில்முறைகேற்ப பயிற்சி அளிக்கப்படும். ஆங்கில பயிற்சி மட்டுமின்றி, ஜப்பானிய மற்றும் ஜெர்மனிய மொழிப் பயிற்சியும்  அளிக்கப்படும்.நான் முதல்வன் திட்டம் மூலம்  அனைவருக்கும் வேலை திட்டம் மட்டுமல்ல, அனைவரின் திறமைக்கு ஏற்ற வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு. மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளை தினமும் படிக்க வேண்டும் என்று முதல்வர்  வேண்டுகோள் விடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தங்களது ஆசைகளை திணிக்கக் கூடாது. தங்களது ஆசைகளை திணிப்பதால் பிள்ளைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று  முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன  படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் “நான் முதல்வன்” இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் இப்படிப்புகளை தமிழக மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தமிழக முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், 47 பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, திறன் பயிற்சி தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com