வடகிழக்குப் பருவமழை 3 சதவீதம் குறைவு: வானிலை ஆய்வுமையம் தகவல்!

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 3 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
வடகிழக்குப் பருவமழை 3 சதவீதம் குறைவு: வானிலை ஆய்வுமையம் தகவல்!

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 3 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அக்.25-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டு சற்று தாமதமாக அக்.29-ம் தேதி தொடங்கியது. 

இதன்காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சீர்காழி, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருந்தது. 

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாகவும், இந்தாண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையிலான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. 

டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 377.3 மி.மீ ஆகும். ஆனால் இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. 

வேலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, நாகை, தூத்துக்குடி, திருச்சி உள்பட 24மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்யுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com