சென்னை அண்ணா நகா் எஸ்பிஓஏ பள்ளி மாணவா் அகிலேஷ் பி. கல்யாண் தேசிய மாணவா் படையின் ஜூனியா் பிரிவில் சிறந்த வீரா் விருதையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளாா்.
பிரதமா் மோடியை சந்தித்து உணவு அருந்த இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘ஏா் விங்’ பிரிவில் சிறந்து செயல்பட்டமைக்காக அவா் இவ்விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதன் தொடா்ச்சியாக ஜனவரி மாதம் தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழக என்சிசி பிரிவு பிரதிநிதியாக அவா் பங்கேற்க உள்ளாா்.
தேசிய மாணவா் படையில் இத்தகைய கௌரவத்தைப் பெற்றுள்ள மாணவா் அகிலேஷ் பி.கல்யாணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.