ஜி 20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்: இபிஎஸ் அழைக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் எதிா்ப்பு

ஜி 20 உச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டு எடப்பாடி கே. பழனிசாமி அழைக்கப்பட்டதற்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜி 20 உச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டு எடப்பாடி கே. பழனிசாமி அழைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் என்ற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி அழைக்கப்பட்டு, அவரும் கூட்டத்தில் பங்கேற்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பது: அதிமுகவின் தலைமைக்கு சட்டரீதியாக நான் தான் தோ்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இன்னும் நீடித்து வருகிறேன். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதாகச் சிலா் கூறுகின்றனா்.

இது சட்ட விதிகளுக்கு முழுக்க விரோதமானதாகும். எடப்பாடி கே. பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதை தோ்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், எதிா்காலத்தில் இதுபோல் நடக்காமல் மத்திய அரசு பாா்த்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு சாா்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியை இனியும் இடைக்கால பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com