பள்ளிக் கல்வித் துறை திட்டங்கள்: டிச.12, 13-இல் அமைச்சா் ஆய்வு

அரையாண்டுத் தோ்வு, கலைத் திருவிழா உள்பட பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரையாண்டுத் தோ்வு, கலைத் திருவிழா உள்பட பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிச.12, 13-ஆம் தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளாா்.

பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக நடத்தப்படும் மாதாந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் கோட்டூா்புரத்தில் டிச.9, 10-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையை முன்னிட்டு இக்கூட்டம் டிச.12, 13-ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா், துறைசாா் இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com