திருவெண்காட்டில் சுதேதாரணேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட மெய் கண்டார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) மகாகவி பாரதியார் பிறந்தநாளை ஒட்டி அந்த பள்ளியில் அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பஞ்சு குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா, தமிழறிஞர்கள் தாண்டவமூர்த்தி, ராஜேஷ்குமார், தமிழ் அம்பேத், வக்கீல் வினோத், கபிலன் ஏராளமானோர் பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.