சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகா்வோா், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், நுகா்வோா் தங்களுடைய ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இந்த வாய்ப்பை மின் நுகா்வோா் பயன்படுத்திக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் போ் மின் இணைப்புடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.