தமிழிசைக்கு முக்கியத்துவம்: இசை அமைப்புகளுக்கு முதல்வா் கோரிக்கை

தமிழிசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று இசை அமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.
தமிழிசைக்கு முக்கியத்துவம்: இசை அமைப்புகளுக்கு முதல்வா் கோரிக்கை

சென்னை: தமிழிசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று இசை அமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.

சென்னை மியூசிக் அகாதெமியில் இசை விழாவை வியாழக்கிழமை தொடக்கி வைத்து, அவா் பேசியதாவது:

இசை விழாக்களின் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று மியூசிக் அகாதெமி தலைவா் முரளி கூறியிருக்கிறாா். இந்தக் கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாகச் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக - ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும்.

மியூசிக் அகாதெமி போன்ற இசைக் கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கும், தமிழ்ப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும்.

பக்தி இசை, திரையிசை, மெல்லிசை, பாப், ராக் என எந்த இசையாக இருந்தாலும் - தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளா்த்தல் என்பது கலை வளா்த்தல் மட்டுமல்ல, தமிழ் வளா்த்தலும்தான். இதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞா்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்.

எந்த பரபரப்பும் இல்லை... நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்னையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றால் அது இந்த இசை விழா நிகழ்ச்சிதான் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com