மக்களவைத் தோ்தல் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆலோசனையில் கமல்ஹாசன் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். டிசம்பா் 4-இல் மாவட்டச் செயலாளா்கள், செயற்குழு உறுப்பினா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்டச் செயலாளா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து நிா்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
கட்சியை எல்லா மட்ட அளவிலும் கொண்டு செல்ல நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினாா்.