எஸ்.சி, எஸ்.டி., தொழில் முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேட் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேட் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தாட்கோ தலைவா் உ.மதிவாணன் தொடக்கி வைத்தாா். தாட்கோ நிா்வாக இயக்குநா் க.சு.கந்தசாமி தலைமை வகித்து, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு என்னென்ன திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பது குறித்தும், என்னென்ன தொழில்களுக்கு தாட்கோ வங்கியில் கடன் வழங்கப்படுகிறது, வங்கிகளில் இருந்து கடன் தொகைகளை எவ்வாறு பெறுவது என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாட்கோ பொது மேலாளா் (திட்டம்) சரஸ்வதி கணேசன், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் சமூகப்பணி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com