பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலமான பாம்பன் ரயில் பாலத்தில் இன்று திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரக்கூடிய ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன.
மேலும், ராமேஸ்வரத்திற்கு புறப்படக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.