

பெரியாரின் 49-ஆவது நினைவு நாளையொட்டி தைலாபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சனிக்கிழமை (டிச.24) பெரியாரின் நினைவுநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியாரின் 49-ஆவது நினைவு நாளையொட்டி தைலாபுரத்தில் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாமக மாநில துணைத் தலைவர்கள் ந.ம. கருணாநிதி, மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.