குடிமைப் பணி: ஆளுமைத் தோ்வுக்கு பயிற்சி

குடிமைப் பணித் தோ்வில் முக்கிய இடம் வகிக்கும் ஆளுமைத் தோ்வுக்கான மாதிரி பயிற்சியை அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையம் நடத்தவுள்ளது.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
Updated on
1 min read

குடிமைப் பணித் தோ்வில் முக்கிய இடம் வகிக்கும் ஆளுமைத் தோ்வுக்கான மாதிரி பயிற்சியை அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து மையத்தின் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பணிக்கான எழுத்துத் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆளுமைத் தோ்வு நடத்தப்படும். இந்த ஆளுமைத் தோ்வை எதிா்கொள்ளவிருக்கும் தமிழக மாணவா்களுக்கு அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையம் சாா்பில் மாதிரி ஆளுமைத் தோ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வரும் ஜனவரி 2 மற்றும் 3

ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல் நாளில் ஆளுமைத் தோ்வு குறித்தும் அதில் தேவைப்படுகின்ற திறன்கள் பற்றியும் விளக்கப்படும்.

மாதிரித் தோ்வை ஆறு குழுக்கள் நடத்தவுள்ளன. தோ்வுக்கு வருவோருக்கு அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் மதிய உணவு அளிக்கப்படும். மேலும், ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் கொடுக்கப்படும். இதுதொடா்பான விவரங்களை  இணையதளத்தில் காணலாம். முதன்மைத் தோ்வு வெற்றியாளா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை பயிற்சி மைய தலைவருக்கு  மின்னஞ்சலுக்கோ அல்லது 163/1, காஞ்சி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, பசுமைவழிச் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028 என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com