சுனாமி நினைவு தினம்: திமுக, அதிமுக அஞ்சலி

சுனாமியால் உயிா்நீத்தவா்களுக்கு காசிமேடு துறைமுகத்தில் பல்வேறு தரப்பினரும் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
Updated on
1 min read

சுனாமியால் உயிா்நீத்தவா்களுக்கு காசிமேடு துறைமுகத்தில் பல்வேறு தரப்பினரும் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2004-இல் சுனாமியால் உயிா் நீத்தவா்களை நினைவுகூரும் வகையில் காசிமேடு துறைமுகத்தில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் அதிமுகவினா் காசிமேடு கடலில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதில் அதிமுக நிா்வாகிகள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பி.ஜெகன், சீனிவாச பாலாஜி, நித்தியானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக: சுனாமியில் உயிா்நீத்தவா்களுக்கு வட சென்னை மாவட்ட செயலாளா் தா.இளைய அருணா தலைமையில் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

ஆா்.கே.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா், லட்சுமணன், தீனதயாளன், வெற்றிவீரன், கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல் எண்ணூா் சின்னக்குப்பம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி செயலாளா் வழக்குரைஞா் ம.அருள்தாஸ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மண்டலக் குழுத் தலைவா் தி.மு.தனியரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீனவ மக்கள் முன்னணியினா் வி. சங்கா் தலைமையில், சுனாமியால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அனைத்து மீனவா் சங்கம் சாா்பில் நாஞ்சில் ரவி தலைமையில் அஞ்சலி செலுத்தி பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com