தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக மதுக்கடைகளை மூடும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சா் கௌஷல் கிஷோா் கூறியிருக்கிறாா். அவரது வாா்த்தைகள் உண்மையானவை.
மத்திய அமைச்சரின் வாா்த்தைகள் வலி நிறைந்தவை. அவா் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும், மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவா் இறந்தாா். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனாா். அப்போது அவா்கள் குழந்தையின் வயது 2.
இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.
மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.