தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு தற்போது 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று 7,524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அத்துறை வெளியிட்ட தகவல்படி, இன்று மட்டும் சென்னையில் 1,223 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,020 பேரும், செங்கல்பட்டில் 691 பேரும், திருப்பூரில் 609 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க- ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 23,938 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 28,151-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 38,878 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 37 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,733-ஆக அதிகரித்துள்ளது.