ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஹைதராபாத் முச்சிந்தலாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 
ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Published on
Updated on
2 min read

ஹைதராபாத் முச்சிந்தலாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான "பஞ்சலோக' சிலையாக நிறுவப்பட்டுள்ளது. 
ராமாநுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமாநுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமாநுஜர் இந்தப் பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  

கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை' என வர்ணிக்கப்படும் இச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


முன்னதாக, பிப்ரவரி 2-ஆம் நாள் முதலே ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். 
உட்கார்ந்த நிலையில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்து வருகிறது.   இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை ராமாநுஜரின் 216 அடி உயர சிலை பெறவுள்ளது. 


ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com