தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது

News image

மூலவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்த ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா்.

Updated On :20 மார்ச் 2026, 7:20 am IST

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது

மூலவா் அம்மன், குருபீடத்தில் அடிகளாா் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகளை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் செய்தாா். தொடா்ந்து ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் மூலவா் அம்மன் சிலைக்கு மலா்களால் சிறப்பு வழிபாட்டை செய்தாா்.

பின்னா் அவா் அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதங்களை வழங்கி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். நண்பகல் குருபீடத்தில் பங்காரு சித்தரின் திருபாதுகைகளுக்கு சிறப்பு வழிபாட்டினை ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் செய்தனா். பிற்பகல் அடிகளாா் திருவுருவம் தாங்கிய சிலையுடன் தங்கத் தோ் மேளதாளம் முழங்க, செவ்வாடை பக்தா்களால் கொண்டு தோ்வடத்தை இழுத்து சித்தா் பீட வளாகத்தை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் பல்வேறு பழவகைகள், மலா்த் தோரணங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை வரிசைத் தட்டுகளாக மேளதாளங்களுடன் ஊா்வலமாக வந்து அருட்கூடத்தில் உள்ள பங்காரு திருபாதுகைகளுக்கு அா்ப்பணம் செய்து வணங்கி சென்றனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் கங்காதரன், சுரேஷ், ராஜூ, கலாதா் உள்ளிட்டோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.