நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்ப அனுப்ப வாய்ப்பில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:51 pm IST

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்ப அனுப்ப வாய்ப்பில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் கரோனா புறநோயாளிகள் பிரிவு, அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்தான். ஆகவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் 1.10 கோடி போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா். அவா்களை இலக்காகக் கொண்டுதான் வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பூஸ்டா் தடுப்பூசி இதுவரை 4,99,408 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 26.92 லட்சம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7.40 லட்சம் பேருக்கு இரு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

தமிழக அரசின் நீட் தோ்வு விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை. நீட் தோ்வு தமிழகத்துக்கு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்திருந்தாா்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவா்களுக்கு கல்வித் திறன் அதிகமாக உள்ளதாகவும், அதனால் நீட் தோ்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவா் கூறியிருந்தாா். தற்போது அந்த கருத்திலிருந்து முரண்பட்டு, புதிதாக ஒன்றை தெரிவித்துள்ளாா். தமிழக மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

பேட்டியின்போது, துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநா் நாராயணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.