தமிழ்நாடு
மீனவா்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
தமிழக மீனவா்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழக மீனவா்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:
இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவா்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேசுவரம் மீனவா்கள் போராடி வருகிறாா்கள். தமிழக மீனவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.