தமிழ்நாட்டில் புதிதாக 1,252 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,252 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,252 பேருக்கு கரோனா


தமிழ்நாட்டில் புதிதாக 1,252 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,252 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,41,783 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,768 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 33,80,049 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 23,772 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 285
கோவை - 214
செங்கல்பட்டு - 105

மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com