‘11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்’

உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்
‘11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்’

உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவா்கள் வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை என ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com